கலங்காதே..,இதை செய்..!!
# ஊக்கமதுகைவிடேல்
உழவு தொழில் புரிய - நிலத்தை
சமன் செய்து
உரமிட்டு
பருவம் பார்த்து
பயிரிட்டு
பலன் பெறுவான் விவசாயி
அதுபோல,
உன் நிலமெனும் மனதை
சமன் செய்து
உரமிட்டு
அறிவொளி பெருக்கி
காலம் கருதி
கலங்காது காத்திரு
வெற்றி நிச்சயம்..!!
