Powered By Blogger
Showing posts with label vinowrites கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label vinowrites கிறுக்கல்கள். Show all posts

Friday, January 4, 2019

என் முதல் ஆங்கிலக் காதல் கவிதை..!!

கிறுக்கல்கள்...
என் முதல் ஆங்கில காதல் கவிதை என்று சொல்லலாம்.

என் முதல் ஆங்கிலக் காதல் கவிதை..!!
ஒருவனுக்கு 
காதல் துளிர்விடும் போது 
அவன் கிறுக்கன் ஆவது போல 
அவனது எழுத்துக் கிறுக்கல்களும் 
கிறுக்குத்தனம் ஆகின்றது..!!
காதல் கிறுக்குத்தனம்.
நான் 
எழுதிய மறுகணம் 
கிறுக்கன் போல 
சிரிக்கத்தான் செத்தேன்.
ஏன் என்றால்,
நான் எழுதியது 
கவிதை என்று 
என் எண்ணக் காதலி நம்பியதால்..!!


                                             

Saturday, December 15, 2018

"இறைவன்=எண்ணங்கள்"

"வே.சு" வின் கிறுக்கல்கள்...

                     "இறைவன்=எண்ணங்கள்"



ஒரு மனிதப் பிறப்பில் அவனது வேண்டுதலெல்லாம், "நல்லவழி காட்டு சாமி" எனும் மந்திரக் குமுறல்கள் நிறைந்தே உள்ளது.அவனின் எண்ணங்களின் நம்பிக்கையின் அளவுகோல் எவ்வண்ணமோ அதைப்பொறுத்தே அவனது தேடல்கள் அனைத்தும் பூர்த்தி அடைகிறது.

ஒருவனது வாழ்வில் நல்ல வழியோ, நல்வினைகளோ, இன்பமோ, துன்பமோ
பிறக்க வேண்டும் எனில், நினைத்த உடன் ஏதும் கிடைத்திடாது அவனது எண்ணத்தின் சக்தியை பொறுத்ததே தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்த சக்தி மிக்க எண்ணங்களே  இறைவனே தவிர வேறொன்றும் இல்லை. 

ஒருவேளை ஒருவன் நினைத்த உடன் அனைத்தும் நடந்து விட்டால் 
அவன் ஒருவன் மறந்தே போவான் "இறைவன்".  



Monday, December 3, 2018

ஒற்றைப் பூக்கள்...

 வே.சு வின்  கிறுக்கல்கள்...
                                                                ஒற்றைப்பூக்கள்....

அனைத்து மனிதனும் ஒற்றைப் பூக்களைப்  போலவே,
ஒருவன் வாழ்வில்சென்றடையும் இடத்தின் தேடலெல்லாம்
கேள்விக்குறிகள் தான்...அந்த தேடலின் முடிவு ஒருவனுக்கு கங்கையை போன்று களங்கமில்லாதப்  புனிதமான இன்பத்தையும்,அதே மற்றொருவனுக்கு கற்கள் போற்றிய போர்வையும் விடையாகக் கிடைக்கிறது. இந்த விடையின் அழகு அவர்கள் என்னிய எண்ணச்செறிவுகளின் வலிமையை பொறுத்ததே...நீயும் எடையிட்டுப் பார் உன் எண்ணம் எவ் வகை என்று...."பூக்களை பதப்படுத்தும் பதப்பெட்டிகள் இங்கு ஏராளம்". அது 
போல உன் எண்ணங்களை பதப்படுத்தி கங்கையை அடைந்துவிடு....