"வே.சு" வின் கிறுக்கல்கள்...
"இறைவன்=எண்ணங்கள்"
ஒரு மனிதப் பிறப்பில் அவனது வேண்டுதலெல்லாம், "நல்லவழி காட்டு சாமி" எனும் மந்திரக் குமுறல்கள் நிறைந்தே உள்ளது.அவனின் எண்ணங்களின் நம்பிக்கையின் அளவுகோல் எவ்வண்ணமோ அதைப்பொறுத்தே அவனது தேடல்கள் அனைத்தும் பூர்த்தி அடைகிறது.
ஒருவனது வாழ்வில் நல்ல வழியோ, நல்வினைகளோ, இன்பமோ, துன்பமோ
பிறக்க வேண்டும் எனில், நினைத்த உடன் ஏதும் கிடைத்திடாது அவனது எண்ணத்தின் சக்தியை பொறுத்ததே தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்த சக்தி மிக்க எண்ணங்களே இறைவனே தவிர வேறொன்றும் இல்லை.
ஒருவேளை ஒருவன் நினைத்த உடன் அனைத்தும் நடந்து விட்டால்
அவன் ஒருவன் மறந்தே போவான் "இறைவன்".